சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படம் மூலம் நெல்சன் திலீப்குமாருக்கு ஜாக்பாட் அடித்தது. இதனால் கூலி படத்தை இயக்கியிருக்கும் லோகேஷ் கனகராஜை விட நெல்சனுக்கு அதிக சம்பளம் ஆகும். இரண்டு படங்களின் தயாரிப்பாளரும் ஒருவர் தான்.
முக்கிய அம்சங்கள்:
கூலி லோகேஷ் கனகராஜின் சம்பளம்
ஜெயிலர் 2 நெல்சன் திலீப்குமார் சம்பளம்
ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் கூலி படம்
லோகேஷ் கனகராஜ் சம்பளம் எவ்வளவு?ரஜினிகாந்த் நடித்திருக்கும் கூலி படத்தை இயக்க லோகேஷ் கனகராஜுக்கு ரூ. 50 கோடி சம்பளம் கொடுத்திருக்கிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம். 6வது படத்திற்கே லோகேஷுக்கு லைஃப்டைம் செட்டில்மென்ட் கிடைத்துவிட்டதே என பேச்சாக உள்ளது. விஜய்யை வைத்து இயக்கிய லியோ படத்தை அடுத்தே லோகேஷ் கனகராஜின் சம்பளம் இந்த அளவுக்கு அதிகரித்திருக்கிறது. கூலி படத்தை இயக்க ஒப்புக் கொண்டதில் இருந்து வேறு எதை பற்றியும் நினைக்காமல், நண்பர்களை சந்தித்து நேரம் செலவிடாமல், குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்து வருகிறார் லோகேஷ் கனகராஜ். இரண்டு ஆண்டுகளாக கூலிக்காக மட்டுமே தன் வாழ்க்கையை அர்ப்பணித்திருப்பதால் ரூ. 50 கோடி தகும் என நினைக்கிறார் அவர்.ஜெயிலர் 2க்காக நெல்சன் திலீப்குமார் சம்பளம் எவ்வளவு?கூலியை அடுத்து ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் 2 படத்தை இயக்கி வருபவர் நெல்சன் திலீப்குமார். இது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் 5வது படமாகும். சூப்பர் ஸ்டார் படத்தை இயக்க அவருக்கு கிடைத்திருக்கும் சம்பளம் ரூ. 60 கோடி என செய்திகள் வெளியாகின.ரஜினிகாந்தின் கூலி படத்தை போன்றே ஜெயிலர் 2 படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கிறது. விஜய்யின் லியோ படத்தை இயக்கி வெற்றி கண்ட கையோடு ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு லோகேஷ் கனகராஜை தேடி வந்தது. அதே போன்று விஜய்யின் பீஸ்ட் படத்தை எடுத்த பிறகே ரஜினியின் ஜெயிலர் பட வாய்ப்பு நெல்சன் திலீப்குமாருக்கு கிடைத்தது.
6வது படத்திற்காக லோகேஷ் கனகராஜுக்கு கிடைத்த சம்பளத்தை தன் 5வது படம் மூலம் ஓவர்டேக் செய்துவிட்டார் நெல்சன். தற்போதைக்கு அனைவரின் கவனமும் கூலி படம் மீது இருப்பதால் ஜெயிலர் 2 பட அப்டேட் பற்றி யாரும் கவலைப்படவில்லை.
எதிர்பார்ப்பு எனும் பிரச்சனைஎன் படம் தீயா வந்திருக்கு, தியேட்டரில் அனல் பறக்கும் என்று கூறி கூலி படத்திற்கு பில்ட்அப் கொடுக்கவில்லை லோகேஷ் கனகராஜ். இருந்தாலும் கூலி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துவிட்டது. தற்போது எல்லாம் ஒரு படத்தின் வசூலுக்கு வேட்டு வைக்கும் பெரிய பிரச்சனையே இந்த எதிர்பார்ப்பு தான்.
ரசிகர்கள் தாங்களாக எதிர்பார்ப்பை உருவாக்கிக் கொண்டு படம் பார்க்கச் செல்லும்போது அதன்படி இல்லை என்றால் இது மொக்கை, ஃபிளாப் என சமூக வலைதளங்களில் போஸ்ட் போட்டுவிடுகிறார்கள். படம் ரிலீஸான முதல் நாளே நெகட்டிவ் விமர்சனம் வந்தால் தியேட்டருக்கு போகும் கூட்டம் வெகுவாக குறைந்துவிடுகிறது. இதனால் தியேட்டர்கள் காத்து வாங்கி படம் ஓடாமல் போய்விடுகிறது.
அதன் பிறகு அதே படம் ஓடிடியில் வரும்போது டைம்பாஸுக்காக பார்த்துவிட்டு அடடா நல்லா இருக்கேப்பா, இதை போய் மொக்கைனு சோஷியல் மீடியாவில் சொன்னாங்களே. அதை நம்பி தியேட்டருக்கு போகாமல் இருந்துவிட்டோமே என ஃபீல் செய்கிறார்கள். அது தான் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான தக் லைஃப் படத்திற்கு நடந்தது
கருத்துகள்
கருத்துரையிடுக